தஞ்சையில் முதல்வருக்கு விவசாயிகள் கருப்புக்கொடி

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விளம்பர முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலை கொள்முதல் செய்த கரும்புகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஒன்றரை ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தஞ்சையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரை சந்திக்க கரும்பு விவசாயிகள் அனுமதி கோரினர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்த முதலமைச்சருக்கு கருப்பு காட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Night
Day