ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விகிதம் குறைந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வந்த பிறகு தான் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக கூறினார். சாதி வாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் திமுக அரசு உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனவும் கூறினார். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என செய்தால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், தமிழக இளைஞர்கள் அதிகளவில் UPSC தேர்வில் வெற்றி பெற்றுவர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Night
Day