நாகை மாவட்ட ஃபைபர் படகு மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படகுகள் சேதமானதால், மீனவர்கள் சிலர் கரை திரும்ப முடியாமல் கடலில் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவதும், படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை பறித்து செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 17 மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படகுகள் சேதமடைந்துள்ளதால், மேலும் சில மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day