ஓடும் பேருந்தில் தவறி விழுந்த மாணவன்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர் தவறி கீழே விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அருப்புக்கோட்டைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்று பயின்று வருகின்றனர். அப்பகுதிகளில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வையம்பட்டி செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day