எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்த இரட்டை கொலையில் 2 கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு மொத்தம் பத்து தனிப் படைகள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி . இவரது மனைவி பாக்கியம்மாள். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இதனிடையே பாக்கியம்மாளும், முதியவர் ராமசாமியும் காயங்களுடன் பிணமாகக் கிடந்தனர். பாக்கியம்மாள் கழுத்தில் இருந்து தாலிக் கொடி, தங்க வளையல் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 10 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொலை கொள்ளை சம்பவம் போல் இருப்பதால் அங்கு விசாரணை ஈடுபட்ட சிபிசிஐடி போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி
காட்சிகளை ஆய்வு செய்வதுடன் அங்கு வசிப்பவர்கள் குறித்தும்
100க்கும் மேற்பட்ட காவலர்கள் கணக்கெடுக்க உள்ளனர்