எழுத்தின் அளவு: அ+ அ- அ
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் அமைச்சர் கீதா ஜீவன் மிரட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் மைய பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் காரணமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் என்றும் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக இருப்பதாக கீதா ஜீவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே மே 2ம் தேதி போராட்டம் காரணமாக எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது என்பது குறித்தும், முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்கள் என அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருப்பது வேதனை அளிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.