சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 28ம் தேதி சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 50 ஆயிரத்தை தொட்டது. அன்று முதல் 50 அயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த தங்கம், நேற்றைய தினம் 50 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் தொடக்க நாளிலே தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 அதிகரித்து 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 50 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day