சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சனாதன வழக்கில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனையடுத்து, கவுஷலேந்திர நாராயணன் என்பவர் உதயநிதிக்கு எதிராக பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 6ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 13ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகும்படி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிள்ளது. 

varient
Night
Day