தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கோவை அருகே உருளைக்கிழங்கு ஆலையில் அமோனியா வாயு கசிவு வெளியான சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னிவீரம்பாளையத்தில் தனியார் உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த ஆலையை திருப்பூரை சேர்ந்த அசிக் முகமது விலைக்கு வாங்கி உள்ளார். அண்மையில் மீண்டும் ஆலை திறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கிய போது அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்துறையினர் ஆலைக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேலாளர் பாலகிருஷ்ணன், தொழில் நுட்ப ஊழியர் குருசாமி, தொழிலாளர்கள் சாம்ராஜ், சம்பத்குமார், ஜாபர் அலி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...