சென்னை : ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப ஆபரண தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. நேற்று தங்கம் விலை 50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 390 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாகவும், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day