''ஊழலால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்தான் தயாநிதிமாறன்'' - மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொடிய மோசமான சித்தாந்தம் கொண்ட திமுகவின் அடக்குமுறைகளையும் மீறி இந்த மண்ணில் தேசியம் மற்றும் ஆன்மிகத்தை பாஜக விதைத்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளும் திமுக குடும்ப ஆட்சிகளின் கையில் உள்ளதாகவும் இந்த முறை அவற்றை பாஜக கைப்பற்ற வேண்டும் என்றார். புதிய சென்னையை உலகத்தரத்தில் பாஜக உருவாக்கும் எனக் கூறினார். ஊழல் செய்ததால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்தான் தயாநிதி மாறன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.    

Night
Day