லண்டனில் நிகழ்த்தியது போல் தமிழ்நாட்டிலும் சிம்பொனி - இசையமைக்கிறார் இளையராஜா

எழுத்தின் அளவு: அ+ அ-

லண்டனில் நிகழ்த்தியது போல் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகத்தில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தப்படும் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும், வாழ்த்து கூற வந்த ரசிகர்கள் இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து, திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி அளித்த இளையராஜா, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி நடத்தப்படுமென தெரிவித்தார். 

Night
Day