கல்லூரி மாணவி கொலை - இளைஞர் போலீஸில் சரண்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு தலைகாதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடுகபாளையம் பொன்முத்து நகர் கண்ணன் என்பவரின் மகள் அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவரது வீட்டின் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் பிரவீன் என்பவரின் குடும்பத்தார் குடியிருந்துள்ளனர். அப்போது பிரவீன், அஸ்விதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

தற்போது பிரவீன் குடும்பத்தினர் பொள்ளாச்சி உடுமலை ரோடு அருகில் குடி பெயர்ந்து சென்று விட்டனர். இந்த நிலையில் அஸ்விகா, தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த பிரவீன் இதுகுறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. 

இதனையடுத்து அஸ்விகாவின் வீட்டிற்கு சென்ற பிரவீன், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மாணவியின் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஏ எஸ் பி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பிரவீன் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Night
Day