எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் திரு. ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 45 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்புடன் பணியாற்றிய நிலையில் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் சாதித்துள்ள இவர், இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் ராஜேஷை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.