நடிகை மஞ்சு வாரியர் காரில் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நடிகை மஞ்சுவாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுட்டிருந்த போது, கேரள பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரை ஓட்டி வந்தது நடிகை மஞ்சுவாரியர் என தெரியவந்தது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Night
Day