எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடங்கு மறு, பூமி, சைரன் ஆகிய படங்களை தயாரித்ததால் 100 கோடிக்கு அதிகமாக கடனாளி ஆனதாகவும், ஜெயம் ரவியை மருமகனாக அல்லாமல் தனது மகனாக நினைத்ததால், அந்த கடன்களுக்கு தானே பொறுப்பெற்று கொண்டதாகவும் மாமியார் சுஜாதா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு வந்தபிறகு சர்ச்சை கிளம்பியது. ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவர் வேறொரு பெண் உடன் வந்தது பற்றி மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடியாக ரவி மேகன் வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது ஆர்த்தியின் தாயார் சுஜாதா தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ரவி மோகனை ஜெயம் ரவி என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரவி மோகனை வைத்து அடங்க மறு, பூமி, சைரன் படங்களை தயாரித்தால், 100 கோடி ரூபாய் அளவில் கடனாளி ஆனதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் வாங்கிய பணத்தில் 25 சதவீதம் ரவி மோகனுக்கு ஊதியம் வழங்கியதாக கூறிய சுஜாதா விஜயகுமார், அந்த பல கோடி கடனுக்கு அவரை பொறுப்பேற்க சொன்னதாக ரவி மோகன் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாக விளக்கம் அளித்துள்ளார். ஜெயம் ரவியை மருமகனாக அல்லாமல் தனது மகனாக நினைத்ததால், அந்த கடன்களுக்கு தானே பொறுப்பெற்று கொண்டதாகவும் கூறிய அவர், ஒரே ஒரு ரூபாய்க்கு பொறுப்பேற்றிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ரவிமோகன் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.