சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் ராஜேஷின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகர்களில் மிக முக்கியமானவர் ராஜேஷ். 1970 களில் தொடங்கி இப்போது வரை நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இதுவரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான ராஜேஷின் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

 நடிகர் ராஜேஷின் உடல் அவரது வீட்டில் இருந்து மதியம் ஒரு மணி அளவில் அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை ஆலயத்தில் பிரார்த்தனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரார்த்தனை முடிந்த பின் மாலை 3 மணி அளவில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு ராஜேஷின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டு ராஜேஷுக்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கீழ்ப்பாக்‍கம் கல்லறை தோட்டத்தில் 35 ஆண்டுகளுக்‍கு முன் கட்டப்பட்ட கல்லறையில் ரஷ்ய நாட்டு முறைப்படி ராஜேஷின் உடல் நல்லடக்‍கம் செய்யப்பட்டது. அவரது பெற்றோர், மனைவி ஆகியோர் நல்லடக்‍கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ராஜேஷின் உடல் நல்லடக்‍கம் செய்யப்பட்டது. 

Night
Day