ஐபிஎல் - சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற 49வது லீக் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், 13 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு சென்றது. மேலும், நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day