ஏப்ரல் 19 ஆம் தேதி திரையரங்குகளுக்கு விடுமுறை : தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே தேர்தல் அன்று தமிழகத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகளுக்கும், திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

varient
Night
Day