தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி மனு : வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டுமென மதுரை ரயில்வே கோட்ட கண்காணிப்பாளர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா - நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைசி நேரத்தில் கூடுதல் தபால் வாக்குசீட்டுக்களை அச்சடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Night
Day