இன்னும் நடுத்தர வர்க்கத்து ஆளாகவே உணர்கிறேன் - விஜய் தேவரகொண்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஷாம்பூ பாட்டிலில் தண்ணீர் ஊற்றி குளிக்கும் பழக்கத்தை தான் இன்னும் பின் தொடர்வதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தான் நடத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க கடினமாக இருந்ததாக தெரிவித்தார். தற்போது தன் பின்புலம் மாறினாலும் தான் இன்னும் நடுத்தர வர்க்கத்து ஆளாகவே உணர்வதாக கூறிய விஜய் தேவரகொண்டா, ஷாம்பூ பாட்டில் காலியானாலும் அதில் தண்ணீர் ஊற்றி குளிக்கும் பழக்கத்தை தான் இன்னும் பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

Night
Day