அன்னபூரணி திரைப்பட சர்ச்சை - நடிகை நயன்தாரா வருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அன்னபூரணி திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்ததாகவும், மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை உருவாக்கிதாகவும் தெரிவித்துள்ளார். அன்னபூரணி திரைப்படம் வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பியதாகவும், மற்றவர்களது உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கும் தனது குழுவுக்கும் துளியும் இல்லை என்றும் நடிகை நயன்தாரா விளக்கமளித்துள்ளார். 

Night
Day