எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள சவுக்கு தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென மூதாட்டியை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மூதாட்டி அணிந்திருந்த முக்கால் சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மூதாட்டி படுகாயத்துடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள மக்கள், மூதாட்டியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களை திசை திருப்பும் நோக்கில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறி ஒருவரை பண்ருட்டி காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.