க்ரைம்
கணவனை அடித்து மனைவியின் தாலி செயினை திருடிவிட்டு தப்பியோட்டம்...
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் ஓட்டுனர் கொலை வழக்கில் கணவன், மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட ரயில்வே நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் மதுரை பைகாராவை சேர்ந்த கார் ஓட்டுநர் முருகன் என்பதும், கடந்த 28ம் தேதி சவாரிக்கு அழைத்து சென்ற அவரை கொலை செய்துவிட்டு காரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் அவரது மனைவி சிராபானு மற்றும் அவரது நண்பர்கள் இருவரை கைது செய்து கடத்தப்பட்ட காரையும் மீட்டனர்.
பெரம்பலூரில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கணவனை தாக்கி மனைவியின் தாலியை...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிட வளாகத்தில் அஇஅதிமுக ?...