ரூ.4 கோடி பறிமுதல் - பாஜக பொருளாளரிடம் விசாரிக்க முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் சேகர், மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் முருகன், முருகனின் பணியாளர்கள் ஜெய்சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரிடம் சென்னை சி பி சிஐ டி அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாஜக பொருளாதார பிரிவு தலைவர் கோவர்த்தன் வீடு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

Night
Day