ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் யூடர்ன் - 6 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் திடீரென யூடர்ன் போட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாமாக உயிரிழந்தனர். சிகார் மாவட்டத்தில் இருந்து ரந்தம்பூர் உள்ள கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார், பனாஸ் ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென யூடர்ன் போட்டது. இதனால் பின்னால் வந்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Night
Day