5 ஆண்டு, 5 பிரதமர், காங்கிரஸ் கூட்டணி திட்டம் - மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அரசு செய்த பாவங்களை  யாராலும் மறக்க முடியாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறினார். அந்த காலகட்டத்தில் நாட்டின் பெரிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த முறை இந்தியா கூட்டணி 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக கூறிய பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய பிரதமர் வந்தால் நாட்டின் கதி என்னவாகும் என்றும் விமர்சித்தார். 

Night
Day