மீஞ்சூரில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன் தினம் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட E3 மீஞ்சூர் காவல் நிலைய சரகத்தில் வஞ்சிவாக்கத்தை சேர்ந்த அஸ்வின் குமார் என்ற 23 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில் ஏற்கனவே அவரது நண்பரான அஜித் என்கிற அவுஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று இந்த படுகொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளான  ஜெயகுமார்,  மோகன்,  கார்த்திக் , தேவராஜ் ,  மனோ ஆகிய 5 பேரை மீஞ்சூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Night
Day