மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்‍கு : நிர்மலா தேவி வழக்‍கில் இன்று தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவிகளை தவறாக வழி நடத்திய நிர்மலாதேவி வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது. நிர்மலா தேவிக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் மாறி வந்த நிலையில், அரசே அவருக்கு வழக்கறிஞரை நியமித்தது. இவர்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Night
Day