மயான கொள்ளை திருவிழா : இளைஞரை நடனமாடி சொல்லி தாக்குதல் - 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் இளைஞரை நடனமாடச் சொல்லி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரை நடனமாடச் சொல்லி, 4 பேர் கொண்ட கும்பல் மிரட்டியுள்ளது. அதற்கு ஹரிஹரன் மறுக்கவே, மறுநாள் அவரது வீட்டிற்கு சென்ற 4 பேரும் ஹரிஹரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு போலீசார் ஹரிஹரனை தாக்கிய பாலமுருகன், ஜெயசூர்யா, ஈஸ்வர், சுந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Night
Day