அதிபர் தேர்தல் : ஜோ பைடன் - டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குடியரசு கட்சி பிரதிநிதிகளில் அதிக வாக்குகளை டொனால்ட் ட்ரம்ப் பெற்ற நிலையில், ஜனநாயக கட்சி பிரதிநிதிகளிடையே ஜோ பைடனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜோ பைடனும் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது. எனினும் வரும் ஜூன் மாதம் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதிபர் தேர்தலுக்கான போட்டியில் வேட்பாளராக தேர்வான பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அதிபர் ஜோ பைடன், சிக்கலான நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய தங்களுக்கு அமெரிக்க மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்...

Night
Day