பட்டாசு ஆலையில் விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
 
சாத்தூர் அடுத்த சின்னக்காமன்பட்டி அருகே கடந்த 1ம் தேதி நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களில் 3 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Night
Day