தேனி: ரூ.15 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் பறிமுதல் - ரூ.1.55 லட்சம் அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் போடி அருகே உரிய ஆவணங்களின்றி விற்பனைக்கு அனுப்பப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை வணிக வரித்துறையினர் கைப்பற்றினர். போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பைசஸ் மாஸ்டர் நிறுவனத்தை நடத்தி வரும் மணிராஜ் என்பவர், ஏலக்காய் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து சென்றபோது வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள் ஏதும் இல்லாததால் வாகனத்துடன் ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். 

Night
Day