சேலம்: பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மாசடைந்து பச்சை நிறத்தில் காணப்படும் தண்ணீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து செல்லும் காவிரி நீர், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.  இதனிடையே இந்த காவிரி தண்ணீர் கடந்த சில நாட்களாக பச்சை நிறத்தில் மாசடைந்து காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.   எனவே மாசடைந்த தண்ணீரை சுத்திகரித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day