திருவண்ணாமலை: நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தியான பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ராஜ யோக தியானம் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் தியான பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி, தியான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, சுவாச பயிற்சி, மன அமைதி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர். 

Night
Day