சேலம்: அரசு கட்டிடத்தை இடித்து ஆக்கிரமித்த தந்தை, மகன்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே அரசு கட்டிடத்தை இடித்து ஆக்கிரமித்த தந்தை, மகன்களை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொலைக்காட்சி அறை கட்டடத்தை, அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்தாண்டு பொக்லைன் மூலம் இடித்துவிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வாழப்பாடி போலீசார், ராஜா மற்றும் அவரது மகன்கள் சத்தியராஜ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். கட்டடத்தை இடிக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

varient
Night
Day