நீலகிரி: தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிராம பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியைவிட்டு வெளியேறிய காட்டுயானை கூட்டம், சேரங்கோடு படச்சேரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். 

Night
Day