தென்காசி: போதை பொருட்களை கடத்தி வந்த திமுக பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியாக உள்ளவர் தமிழ் செல்வி போஸ். இவரது கணவர் சுபாஷ் சந்திரபோஸ், தென்காசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகிரி பகுதியில் தனிப்படைப் போலீசார் அவருடைய காரை வழிமறித்து வாகன சோதனை செய்ததில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 600 கிலோ எடைகொண்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் லாசரஸ் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day