51,000 பேருக்கு பணி நியமன ஆணை

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக வழங்கினார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் திட்டத்தின் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் 16வது கட்டமாக 51 ஆயிரம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிய நியமன ஆணையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார். 

பணி நியமன ஆணை வழங்கப்பட்ட இளைஞர்கள், ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளில் பணியமர்த்தப்ட உள்ளனர்.

Night
Day