சென்னை: நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறார் கைதி தப்பி ஓட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட சிறார் கைதி ஒருவர் காவலர்களை தாக்கி விட்டு தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ரவுடி தேசிங்கு 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். இந்நிலையில் இளைஞர் நீதி குழுமம் கெல்லீஸ் காப்பகத்தில் அடைப்பதற்காக மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்த காத்திருந்த நிலையில், போலீசாரின் கையை தட்டி விட்டு சிறுவன் தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day