சென்னை: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தண்டையார்பேட்டை அருகே ரவுடியை வீடு புகுந்து கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கே நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர், மீது கொலை முயற்சி, தடியடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், ஆனந்தை வீடு புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day