சென்னை: ரூ.3.57 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி - 8 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஐசிஐசிஐ வங்கியில் போலியான வங்கி கணக்கை ஆரம்பித்து தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஐசிஐசிஐ வங்கியில் போலியான நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளர் ரங்கநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையை சேர்ந்த சதீஷ் என்பவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து போலியான நிறுவனம் தொடங்கி தனிநபர் கடன் பெற்று 3 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day