திருவாரூர்: அரசு மருத்துவமனையில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூரில் மதுபோதையில் மருத்துவர்கள் இல்லை என கூறி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வரும்போது கீழே விழுந்து காயம் அடைந்தனர். அப்போது இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நிலையில் அங்கு மருத்துவர் இல்லை என கூறி அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மதுபோதையில் தகராறு செய்த இருவரையும் கைது செய்தனர். 

varient
Night
Day