கோவில்பட்டி வழியாக கடத்திச் வரப்பட்ட போதைப்பொருள்கள் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக கடத்தி வரப்பட்ட 470 கிலோ பான் மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் சரக்கு வாகனத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருள்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட 470 கிலோ பான் மசாலா குட்கா பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.  மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்தனர். 

Night
Day