சென்னை: இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தை திருடியவரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கேசிபி ரோடு பகுதியில் உள்ள அன்சா குடியிருப்பில், கடந்த 22ஆம் தேதி குடிநீர் கேன் விநியோகம் செய்யும்  தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் திருடு போனது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அண்ணாமலை நகர் பகுதியில் சுற்றித் திரிந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருடிய வாகனத்தை அவர் செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்றது தெரியவந்தது. அங்கு சென்று வாகனத்தை மீட்ட போலீசார், ரமேஷை கைது செய்தனர்.

Night
Day