கள்ளக்குறிச்சி: குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மதுபோதையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மருத்துவமனை வளாகமே கலவர பூமியானது. அங்குள்ள அந்திலி கிராமத்தில் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக, டேங்க் ஆபரேட்டர் சண்முகம் தரப்பினருக்கும், ஞானபிரகாசம் தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது மீண்டும் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனையே கலவர பூமியாக மாறியது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day