தமிழகம்
ஜெயக்குமார் வீட்டில் மற்றொருவரின் கைரேகை - புதிய திருப்பம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் அருகே எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்புச் சுவற்றில் பேருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்க...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள...