தூத்துக்குடி: ரூ.15 லட்சம் மதிப்பிலான 1,300 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
வீரபாண்டிய பட்டணம் கடற்கரையில் க்யூ பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக சென்ற டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் 43 மூட்டைகளில் ஆயிரம் 300 கிலோ பீடிஇலைகள், இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வரப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக ஆலந்தலை சேர்ந்த ராஜா, பாலமுருகன் இருவரையும் கைது செய்து, 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day