க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆயிரம் ரூபாய் கடனுக்காக பானிப்பூரி வியாபாரி கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புத்தன்தருவை கிராமத்தை சேர்ந்த பானிப்பூரி வியாபாரி காதர் மீரான் சாகிப், கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் மெடிக்கலில் ஆயிரம் ரூபாய்க்கு மருந்துகள் வாங்கிவிட்டு கடன் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை வாங்க சென்ற மெடிக்கல் மேலாளர் முபாரக் இம்ரானுக்கும், காதர் மீரான் சாகிப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டைவிட்டு வெளியேறிய பானிப்பூரி வியாபாரியை, மெடிக்கல் மேலாளர் காரை ஏற்றிக் கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற தட்டார்மடம் போலீசார் உடலை மீட்டு, தலைமறைவான மெடிக்கல் மேலாளரை தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...