துணிக்கடை உரிமையாளர் மகனை கட்டிப்போட்டு 30 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொடுங்கையூரில் துணிக்கடை உரிமையாளர் மகனை கட்டிப்போட்டு 30  சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கொடுங்கையூரில் உள்ள துணிக்கடை ஒன்றின் உரிமையாளர் மகன் அம்பரீஷ். இவரது பெற்றோர் வெளியூர் சென்ற நிலையில், ஓரினச் சேர்க்கையாளரான அம்பரீஷ், கிரிண்டர் ஆப் மூலம், ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் நேரில் வந்துள்ளனர். தொடர்ந்து அம்ரீஷை கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 30  சவரன் தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கொடுங்கையூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day